Thursday 29 December 2011

இருக்கும் பணத்தை செலவு செய்ய ஸோர்ஸ் தேடும் பெருமக்கள் அடிக்கடி உலவும், ஸ்பென்ஸர் ப்ளாஸாவின் படிக்கட்டுகளில் அமர்ந்து, இப்படி ஒருவன் அமர்ந்து இருப்பதையே அறியாமலும், அறிந்தாலும் சட்டை செய்யாமலும் நகரும் பி.பி. டாப்ளட் அங்கிள்கள், ஸ்லீல்லெஸ் ஆன்ட்டிகள், ஸ்ட்ரெய்டன்ட் ஹேர் ரோமியோக்கள், வாக்ஸன்டு ஸ்கின் கேர்ள்ஸ், க்ளீவேஜ் கண்ணிகள் ( க்ளீவேஜ்- என்றால் என்ன? என்று கேட்பவர்கள் பெயர் கூடிய சீக்கிரம் ஒயிட் ஹவுஸ் புக்கில் இடம்பெறட்டும். ஒயிட் ஹவுஸ் புக் என்றால் ஏதோ உயர்வானது என்று நினைப்பவர்கள் கூகுளில் தேடவும்) ஆகிய யாவரையுமே பொருட்படுத்தாது, இந்தக் குழந்தை இப்படி வெறி கொண்டு எழுதுவது யாதெனில் " எனக்கு ஏன் இந்த நிலமை" என்பதே ஆகும். 

இரண்டாள் உயரமும், முறுக்கி விட்ட கிடாய் மீசையுமாய், நட்டமாய் நின்று "பார்த்தசாரதி" அருள்பாலிக்கக் காத்துக் கிடந்தாலும், அவரை விட முக்கியம் டாஸ்மாக் தான் என்று ஒரே ரோட்டில் 5 டாஸ்மாக்குகள் வைத்து, ட்ராபிக் ஜாம் செய்யும் அளவிற்குக் குடிமகன்கள் பெருத்தது ட்ரிப்ளிகேனி (எ) திருஅல்லிக்கேணி (எ) திருவில்லிக்கேணி. புறாக்கூண்டு மேன்சன்களுக்கு மத்தியில், புல்வெளி, தோட்டம், விளையாட்டு மைதானம், விசாலமான காற்றோட்டம் கொண்ட அறைகள் என்ற ஒரு ட்ரீம் மேன்சன் எமது. 

முதல்நாள் இரவு, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற கூற்றை நம்பி வந்துவிட்டு எம் போன்ற "பேச்சுலர்களால்" அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற ஆந்திரா மெஸ்களில் ஒன்றைத் தேடிப் பிடித்து 2 ஆப்பாயில், ஒரு ஆம்லெட் சகிதம் ஆறு ரவுண்டு மீல்ஸும், கடைசியில், கர்ட் வித் ஸுகரும் (curd with sugar) சாப்பிட்டு விட்டு வந்து படுத்தேன். எமைத் தேடி எப்போதும் போல் ஓடோடி வந்தாள் நித்திரைக் கண்ணி. சரி வந்துவிட்டாளே, என்று அவளிடம் எமை ஆட்கொள்ள விட்டேன். பிரபல நடிகையுடன் டூயட் பாடுவதாய்க் கனவு. பிற்காலத்தில் பிரபல எழுத்தாளர் ஆகும் வாய்ப்பு எமக்குப் பிரகாசமாக் இருப்பதாலும், அப்போது இந்த நடிகை (எப்படியும் மார்கெட் போயிருக்கும்) "என் கனவிலே தான் வந்த"தைச் சொல்லி அழுகுனி மெகா சீரியல்களில் வாய்ப்புத் தேட முற்படலாம் என்பதால், பொதுநலம் கிஞ்சிற்றும் இன்றி சுத்தமான சுயநலத்தின் பெயரால் அந்த நடிகையின் பெயரை இங்கே தவிர்க்கிறேன். கனவைக் கலைத்தது இயற்கை உபாதைகளில் ஐந்தில், நான்கைக் கழித்தால் வருவது. லைட்டைப் போட்டு, ரூம் மேட்டுகளிடம் சகஸ்ரநாமம் பெற விரும்பாமல், ஒருவழியாகச் சென்று, கூட்டலுக்கு எதிர்ப்பதமானதைச் செய்துவிட்டு வந்தேன். மணி சுமாரய் 4.30/5.00 இருக்கும். ரூம் வாசலில் ஒரு ஆறு பேர். நார்த் இந்திய நன்னாரிகள்.


ராம் ராம் ராஜா பைய்யா என்றார்கள். 

ராம் ராம் என்றேன். 

ராஜா பைய்யா ஹாப்பி தீவாளி என்றார்கள். 

ஹாப்பி தீவாளி என்றேன். விட்டதா விதி? 

"பைய்யா ஹம் தீவாளி க்யோன் மனாதேன்" என்றார்கள். (அதாவது, அண்ணே, நம்ம தீவாளி ஏன் கொண்டாடுறோம் ) 
கொலகாரப் பாவிகளா? எந்த நேரத்துல என்ன கேள்விடா கேக்குறீங்க. வந்த கடுப்பில் 
"துபாரா மத் பூச்னா" ( க்ளோரோமின்ட் விளம்பரம் பார்க்கவும்) சொல்ல மற்றும் செய்ய நினைத்தேன். ஆனால், அந்த நேரத்திலும் விழிப்பாய்ச் செயல்பட்ட எமது மூளையின் நியூரான்கள் " தம்பி ராஜா அவர்கள் ஆறு பேர், நீ தனி ஆள், அதுவும் உனது அர்னால்ட் உடம்புக்கு இது மிகவும் கெடுதல்" என்ற தகவலை செரிப்ரம், செரிபெல்லம் வரைகும் அப்டேட் செய்ய, அமைதியாய்ச் சொன்னேன் " கவர்மெண்ட் ஸ்டாஃப் போனஸ் கேளியே, பிரைவேட் ஸ்டாஃப் சுட்டி கேளியே அவுர் நேதவோ வோட் பேங்க் கேளியே". 
(அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கிறது, தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது, அரசியல் தலைவர்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது ) 

அசராமல் கேட்டான் ஒரு மராட்டிய மங்குனி பாண்டியன் ( ராஜ் தாக்கரே இதைக் கண்டு கொள்ளா(ல்லா)திருப்பாராக. " தோ ஆம் ஆத்மி". (அப்ப சராசரி மனிதன்? அதாவது காமன் மேன் ) 

இறைவனின் படைக்கும் சக்திக்கு உடனே ஒரு சென்சார் போர்டு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், இவனைப் போல் இன்னும் பல பேர் பிறந்து, எமைப் பாடாய் படுத்தும் அபாயமிருக்கிறது. 

பதில் சொன்னேன் " ஆம் ஆத்மி, உஸ்கோ கோயி அவுர் காம் நஹி, கோயி அவுர் தறிக்கா நஹி". 
( சராசரி மனிதனுக்கு வேற வேல இல்ல, வேற வழியுமில்ல) 

சிரித்தார்கள். பரதேசிகளா, சிரிக்கிறது கூட போஜ்புரியிலயாடா? 

சரி இந்தக் கேப்பில் நைஸாய்க் கழன்டு கொள்ளலாம் என்று நினைத்தை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டது ஒரு பீஹாரி பைன்ஸ். கேட்டது "ஹம் சப் ஹாப்பி தீவாளி க்யோ கஹ்தே, தீவாளி கி சுப் காம்னாயே க்யோ நஹி கஹ்தே". ( தீவாளி வாழ்த்துக்கள் ஏன் ஆங்கிலத்தில் சொல்கிறோம்) 

அது பொதுவாய்த் தான் கேட்டது. ஆனாலும், என்னைத் தவிர மற்ற எல்லோரும் என்னையே பார்த்தார்கள் அதாவது, இந்தக் கேள்விக்கும் நானே பதில் சொல்ல வேண்டுமாம். அடப் பாவிகளா? நான் என்ன " இவ்விடம் தங்களது சந்தேகங்கள், உடனுக்குடன், இலவசமாகத் தீர்த்து வைக்கப்படும்" என்று என் கழுத்தில் போர்டு மாட்டிக் கொண்டா திரிகிறேன். வேறு வழியின்றிச் சொன்னேன் " யார் ஸிர்ப் விஷ் கர்னா ஹ யார். இஸ்மே பாஷா கி கோயி பர்வாஹ் நஹி". ( வாழ்த்துக்கள் சொல்வதற்கு மொழி தடையாகாது ) 

இன்னொருவன் கேட்டான். பாய் க்யோன் பாய் அங்ரேஜி பேன் க்யோன் கஹே. ஹிந்தி மேன்ஹி கஹனா ஹ பாய். ஐஸே கஹனா மேரா ரைட் ஹ பாய். என்றான். ( அவனுக்குப் பிடித்த மொழியில் சொல்வது அவனது உரிமையாம்) " ஸோ டஸ் மை சாய்ஸ் ஆப் லாங்குவேஜ்" என்றேன்.

பாய் பிரிட்டிஸர்ஸ் லெப்ட் இந்தியா, தென் ஒய் டு ஹாவ் தேர் இங்லீஷ், விச் தே கேவ் என்றான்.(bhai britishers left india India, then why to have their english, which they gave) ஹா, தென் கிவ் பேக் த ஃப்ரீடம் தட் தே கேவ் யூ. ஈவன் ஃப்ரீடம் வாஸ் கிவன் பை பிரிட்டிஷர்ஸ்" (huh, then give back the freedom which they gave. Even freedom was given by British) என்றேன். ஆடிப் போய்விட்டார்கள். இது போதும் நான் தப்பிக்க. "ராம் ராம் " சொன்னேன் சத்தமாக. புரிந்து கொண்டு கிளம்பினார்கள்.

ரூமில் நுழைந்து சட்டை அணிந்து காபி குடிக்கக் கிளம்பினேன். பில்டர் காபி. எனது பேவரிட். As usual ஆனந்த பவன். எல்லாமே As usual. காபி, நுனி நாக்கில் இனித்து, அடித் தொண்டையில் கசந்தது. நல்ல காபியின், அடையாளமே இதுதான். 


ரூமிற்கு வந்தேன். தூக்கம் கலைந்து விட்டிருந்தது. ஹீட்டர் வைத்தேன் வெந்நீர் வேண்டி. குளித்து முடித்து தலை துவட்டிய வண்ணம் செல்போன் பார்த்தேன். எனது பாஸின் மிஸ்டு கால். சனியன். ஒரு நாளு கெழம நிம்மதியா இருக்க விடாது. நான் செல்போனைத் திட்டினேன். பாஸை அழைத்தேன். ஹாப்பி தீவாளி ராஜா என்றார்.ஐயய்யோ மறுபடியுமா என்று மனதிற்குள் கதறினேன். விஷயம் என்னவென்றேன். ரொம்ப கூலாக சொன்னார். அலுவலகம் வரும்படி. நோ நோ, போகும்படி ( அவர் வரவில்லை). 

அலுவலகம் சென்றேன். செத்தேன். ஜாவா 1.4, ஆரக்கிள் 9-I இருக்கும் அப்ளிகேஷனை, ஜாவா 1.6, ஆரக்கிள் 10g -இல் வேலை செய்யவில்லை என்றார்கள். விளக்கினேன். சரி இப்ப வேல செய்ய வை என்றார்கள். பாவிகளா, காளை மாடு பால் சுரக்காது என்றேன். அவர்களோ என்ன வேண்டுமானலும் த்ருகிறோம் என்றார்கள். ஐயா, வல்லாளகண்டய்ங்களா, வேப்பம்புண்ணாக்கு இல்ல, கடலப்புண்ணாக்கு வச்சாலும் காள மாடு பால் கறக்காது என்று விரிவுரையாற்றி விட்டு, காலை 8.45க்கு நழைந்தவன், மதியம் 12.35க்கு வெளியேறினேன். இதோ வந்துவிட்டேன் spencer-க்கு. நேற்றிரவே இன்று மாலை 3 மணிக்கு சத்யமில் மேட்னி பார்ப்பதாய் நண்பர்கள் ஏற்பாடு. இன்னும் நிறைய நேரமிருக்கிறது.

Spencer - வெகு காலமாய், சென்னையின் நவநாகரீகத்தின் அடையாளம். என்னதான் சிட்டி சென்டர்கள், இஸபானி ப்ளாஸாக்கள் வந்தாலும், கார்ன்ஃப்ளேக்ஸையும், ப்ரட் டோஸ்டையும் அருகே நெருங்க விடாமல், எப்போதும் நம்பர் ஒன்னாக் இருக்கும் பிரேக்ஃபாஸ்ட் இட்லி போல், எப்போதும் இது நம்பர் 1 தான். என்ன காரணம்? யோசித்தேன். பாருங்கள் வெட்டியாய் இருந்தால் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியது இருக்கிறது. சரி வாருங்கள் காரணத்தைப் பார்ப்போம். 

சிட்டியின் மையத்தில், சுலபமாக அடையும் இடம். மவுண்ட் ரோடில் spencer ஒரு குறிப்பிடத்தகுந்த லான்ட்மார்க். அதிலும் ஜோடிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஜோடி போட்டு நடக்கையில், ஒரு கை 5 ரூபாய் கோன் ஐஸுடன் வலம் வந்து என் போன்றோர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். ஒரு கை கோனைஸைப் பிடிக்கிறது, அப்ப் இன்னொரு கை என்ன செய்யும் என்று யாரும் அபத்தமாகக் கேட்டு விடாதீர்கள். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முயன்றால், பிறகு தலைப்பில் 18+ என்று போட வேண்டி வரும். சத்யம் தியேட்டரில் டிக்கட் கிடைக்கவில்லையா, கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டீர்களா, ஆபிஸில் வேலை இல்லையா/ அதிகம் இருக்கிறது தப்பிக்க வேண்டுமா ஓடு spencer-க்கு என்று ஒடுகாலிகள்/ஒடுகாலர்களின் வேடந்தாங்கல் இந்த spencers. 

சரி ஒரு ரவுண்டு வருவோமே என்று கிளம்பினேன். கண்ணில் பட்டன கலர் கலராய். நான் பொருட்களைச் சொன்னேன். பார்த்தேன், ரசித்தேன். இதுவும் பொருட்களைத்தான், நீங்கள் நம்பித்தான் ஆகவேன்டும். பான்டலூன்ஸ், வெஸ்ட்ஸைட் - தி.நகரில், 200 சொல்லி 110க்கு கிடைக்கும் துணிகள் இங்கே சர்வ சாதாரணமாய் 1500-க்கு மேல். நானெல்லாம் பார்ப்பதோடு சரி. லேன்ட்மார்க். புத்தகப் பிரிவு. தமிழ் புக்ஸ் section. கடுப்பேறியது. ஆட்சியாளர்களுக்கு அதிகம் ஜால்ரா போடு அல்லக்கைகளின் கவிதைத் தொகுப்புகளும், காவியங்களும் பெருகிக் கிடந்தன. கடவுளே இந்த அரசியல் நுழையாத இடமே இல்லையா? 

கண்ணில் பட்டது " தெய்வத்தின் குரல்". காஞ்சிப் பெரியவர். பெரியவர் என்றால் தற்போது இருக்கும் கொலைக் குற்றவாளி அல்ல. அவருக்கு முந்தையவர். பிரம்மச்சர்யம் போதித்துவிட்டு நடிகையுடன் சல்லாபிக்கவோ, யோகாமையம் நடத்தி ஐட்டம் ஸாங்குக்கு குத்து டான்ஸ் போடவோ, பத்தாவது அவதாரம் நான் தான் என்று பீற்றிக் கொள்ளவோ செய்யாதவர். (இந்த மூன்று பேர் யார் என்று தெரியாதவர்களுக்கு பரலோக சாம்ராஜ்யத்தில் இடமில்லை). தனது காஷாயத்தை தானே துவைத்து, உலர்த்தி, கடல் கடக்க மாட்டேன், மோட்டார் வாஹனம் பயன்படுத்த மாட்டேன் என்று வாழ்ந்த ஒரு துறவி. மடத்திற்குள் அனைத்துச் சாதியினரும் வரலாம் என்று சொன்ன ஒரு நல்ல மனிதர். படித்தேன். மணிப்பிரவாள நடையில் சொல்லிருந்தார். ஒரு பக்கம் படித்தேன். தலை வலித்தது. கட்டாயமாய் ஒரு டபுள் ஸ்ட்ராங் பில்டர் காபி வேண்டும். 

நடந்தேன் சரவண் பவன் நோக்கி. காபி ஆர்டர் செய்தேன். ஏதேச்சையாய் கண்ணில்பட்டது ஒரு சாக்லேட். ஆம், கூந்தலின் நிறம், கண்ணின் விழி, உதட்டுச் சாயம் என் எல்லாமே சாக்லேட் பிரவுன் கலரில். அட, இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தைப் போல் அதள பாதளத்திற்கு இறங்கிய அந்த லோகட் டி-ஷர்ட், பொங்கும் காவிரியை அடக்கி வைக்க கபிணி படும்பாடு பட்டுக் கொண்டிருந்தது. ஆஹா அந்த டிஷர்ட்டும் சாக்லேட் பிரவுன் கலரில். அப்புறம் அந்த ஜீன்ஸ். அந்த மகராசிக்கு யாரவது போய் லோஹிப்புக்கும், அப்பர் தைக்கும் வித்தியாசம் சொல்லிக் கொடுத்தால் தேவலை. அப்புறமென்ன, கீழிடுப்பில் போட்டாலும் பரவாயில்லை, இந்த மடந்தை மேல் துடையில் அல்லவா போட்டிருக்கிறாள். அவ்வளவும் அப்பட்டமாய். அதையும் நாம் சொல்லக்கூடாது. அப்புறம் அகில உலக பெண்விடுதலைப் போராளிகளும், அண்ட பிரபஞ்ச முற்போக்குவாதிகளும் வந்து எமை ஆணாதிக்கவாதியென்றும், பிற்போக்குவாதியென்றும் சாடுவார்கள். 

அதுசரி. இப்படி உடை உடுத்தினால், இதனால் தமிழ் கலாச்சாரம் கெட்டா போய்விடும். பெயர் மட்டும் கனிவிழி, கயல்மொழி என்று வைத்துவிட்டால் போகிறது. அரசே அதைதானே சொல்கிறது. 4 ஐட்டம் ஸாங், 2 ரேப் ஸீன் இருந்தாலும், பெயர் மட்டும் தமிழில் இருந்தால் வரிவிலக்கு அளிக்கிறதே. இவ்வளவு ஏன், மலையாள பிட்டுப் படங்கள் கூட தமிழ் பெயரில் தானே ஓடுகின்றன வரி விலக்கிற்காக. எனக்கு அதிலெல்லாம் ஒரு குழப்பமும் இல்லை. எனது சந்தேகம் எல்லாம் ஒரு தெரிவை அரிவையாகவோ, அரிவை மடந்தையாகவோ காட்டிக் கொள்வது எதோ ஆர்வக்கோளாறு எனலாம். ஆனால், பேரிளம்பெண்கள் தங்களை ம்ங்கைகளாகவும், மடந்தைகளாகவும் காட்டிக் கொள்ள முற்படுவது ஏன். அதுசரி இவர்களை நம்பித் தானே வெளிநாட்டு காஸ்மடிக் கம்பெனிகள் அடிக்கடி இந்தியப் பெண்களுக்கு உலக அழகி, பிரபஞ்ச அழகி என்றெல்லாம் பட்டம்கிடைக்கச் செய்கிறார்கள். 110 கோடி மக்கள் என்றால் சும்மாவா. எம்பூட்டு வியாபாரம். சிந்தனையைக் கலைத்தார், காபி கொண்டு வந்த சிப்பந்தி. 

ஸ்ட்ராங் காபி தான் கேட்டேன். பாவிகள் மோஸ்ட் ஸ்ட்ராங்கஸ்ட் காபியைக் கொடுத்திருக்கிறார்கள். ஜல் புயல் சென்னைக்கு ஏற்படுத்திய பாதிப்பை இந்த எழவு காபி என் கண்களூக்கு ஏற்படுத்தியது. ஆம் இருகண்களும் வெள்ளக்காடாகின. கடுப்பாய் திரும்பி "பில்" என்றேன். யெஸ் ஸார். சொன்னார்கள், சென்றார்கள். பில் மட்டும் தாமதமின்றி வந்தது. அது சரி ஆரியக் கூத்தாடினாலும் காரியமே குறி. பணம் கொடுத்தேன். மீதி சில்லரை. அவர்களாகவே டிப்ஸ் என்று வைத்துக் கொண்டார்கள். I've been taken for granted. மனது வலித்தது. 

வெளியே வந்தேன். மணி 2.45. நடந்தால் சரியாக் இருக்கும். நடந்தேன் சத்யம் தியேட்டர் நோக்கி. ஏதேச்சயாய் செல் போன் பார்த்தேன். 22 அன்ரெட் மெஸேஜஸ் என்றது. ஒவ்வொன்றாய் வாசித்தேன். என்ன ஆச்சர்யம் எல்லாமே தீபாவளி வாழ்த்துக்கள். சுரீரென்று உரைத்தது. இன்று தான் தீபாவளி. அடுத்த தீபாவளிக்குக் கட்டாயம் ஊருக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தேன், சென்ற வருடம் முடிவு செய்தது போல. சே. நான் கொண்டாடும் முன்னரே முடிந்து விட்டது. தீபாவளி. பொல்லாத வலி

No comments:

Post a Comment